tamilnadu

img

சு. வெங்கடேசன் எம்.பி. தலையீட்டால் நடவடிக்கை பொங்கல் அன்று நடக்கவிருந்த சிஏ பவுண்டேஷன் தேர்வு மாற்றம்!

சென்னை, நவ. 26 - பொங்கல், மகரசங்ராந்தி ஆகிய பண்டிகைகள் ஜனவரி 14 அன்று கொண்டாடப்பட உள்ளதால், அன்றைய நாள் நடைபெறவிருந்த தேர்வுகள், ஜனவரி 16-ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட் டுள்ளது.

பட்டயக் கணக்காளர் ஃபவுண்டேஷன் படிப்பிற்கான தேர்வுகள் ஜனவரி 14, 2025 அன்று நடத்தப்படும்என இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் (ICAI) அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு முதன்முதலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  நாடாளுமன்ற மக்களவையின் மதுரை தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்திருந்தார். 

ஒன்றிய அமைச்சருக்கு கடிதம்

“தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.01.2025) அன்றும், உழவர் திருநாள் (16.01.2025) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வு கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சி.ஏ. பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னைத் தொடர்பு  கொண்டு முறையிட்டனர். எனவே, ‘அறு வடைத் திருநாளான’ பொங்கல் திரு விழா என்பது தமிழ்நாட்டின் தனித்து வமிக்க பண்பாட்டுத் திருவிழா என்பதை கருத்தில் கொண்டு தேர்வர்களுக்கு சிரமங்கள் இன்றி தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும்” என்று  ஒன்றிய நிறுவன விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத் (ICAI) தலைவர் சி.ஏ. ரஞ்சித் குமார்  அகர்வால் ஆகியோருக்கு உடனடி யாக கடிதங்களையும் எழுதினார்.

நிர்மலா சீதாராமன் ஆணவம்

இதனிடையே, “பட்டயக் கணக்கா ளர் படிப்புக்கான தேர்வுத்தேதிகள், இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் (ICAI) எனும் ஒரு சுதந்திரமான சட்டப்பூர்வ அமைப்பால் இது தீர்மானிக் கப்படுகிறது; நிதி அமைச்சகத்தால் அல்ல!” என்று சு. வெங்கடேசன் எம்.பி.க்கு  எதிராக தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருந்தார். அதனை  ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மறுபதிவிட்டு, அதில், “சரியா விளக்கமா, பதில் சொல்லியிருக்கீங்க சூர்யா.. எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும் தமிழ் விரோதி பிரச்சாரம், சிலருக்கு பழக்கமாகி விட்டது போலும்.” என்று பொங்கியிருந்தார்.

பின்வாங்கிய ஐசிஏஐ

ஆனால், தற்போது ஜனவரி 14 -பொங்கல் அன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்து, இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் திடீரென பின்வாங்கியுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின் தேர்வுகளுக்கான இணைச் செயலாளர் ஆனந்த் குமார் சதுர்வேதி வெளியிட்டுள்ளார். அதில், “ஜனவரி- 2025 மகர சங்கராந்தி, பிஹு, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு பொதுத் தகவல் இந்த அறிக்கை வாயி லாக அறிவிக்கப்படுகிறது. இதன்படி இந்தியா முழுவதும், ஜன.14 அன்று நடக்க விருந்த பட்டயக் கணக்காளர்கள் பவுண்டேஷன் தேர்வு, 2025  ஜன.16-க்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.