ரஷ்ய குத்துச்சண்டை வீரர் திமித்ரி
சென்னைக்கு நாளை வருகிறார்
சென்னை, மே 6- சென்னை வருகை தரும் உலகப் புகழ்பெற்ற ரஷ்ய குத்துச்சண்டை வீரர் ‘நாக்அவுட் மாஸ்டர்’ திமித்ரி குட்ரிய ஷோவ், வியாழனன்று நடைபெறும் சிறப்பு குத்துச்சண்டை பயிற்சி முகாமில் 60 இளம் வீரர்களுக்கு (மாஸ்டர் கிளாஸ்) பயிற்சி அளிக்க உள்ளார். சென்னையில் உள்ள ரஷ்ய அறிவி யல் மற்றும் கலாச்சார மையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வு, கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமியில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்ற 80-வது ஆண்டு நினைவாக உலகளாவிய அளவில் முன்னெடுக்கப்படும் “எட்டர்னல் ஃப்ளேம்” திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாஸ்டர் கிளாஸ் நடத்தப்படுகிறது. விளையாட்டு மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், வரலாற்று நினைவுகளைப் போற்றும் வகையில் இந்த நிகழ்வு அமைகிறது. திமித்ரி குட்ரியஷோவ் தனது துல்லியமான தாக்கு தல்களுக்காக உலக அளவில் அறியப்பட்ட வர். இந்த சிறப்பு பயிற்சி முகாமில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறந்த பயிற்சி இல்லங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட 60 இளம் குத்துச்சண்டை வீரர்க ளுக்கு அவர் நேரடி பயிற்சி அளிக்க உள்ளார். விளையாட்டின் மூலம் நாடுகளுக்கிடை யிலான நட்பையும், கலாச்சாரப் பரி மாற்றத்தையும் வலுப்படுத்தும் ஒரு அருமையான வாய்ப்பாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. குத்துச்சண்டை ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.