tamilnadu

img

சிதம்பரம் அருகே ஊரக விளையாட்டுப் போட்டிகள்

சிதம்பரம், ஜன. 14- பொங்கல் திருநாளையொட்டி தமிழக அர சின் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஊரக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப் பட்டு வருகிறது. சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் பள்ளிப் படை ஊராட்சியில் ஊரக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் சிதம்பரம்  சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தும், புதிதாக ரூ 60 ஆயிரம் மதிப்பில்  அமைக்கப்பட்டுள்ள அம்மா இளைஞர் விளை யாட்டுப் பூங்கா வினை திறந்து வைத்தார். விழாவிற்கு பரங்கிப்பேட்டை ஒன்றிய பெருந் தலைவர் கருணாநிதி தலைமை தாங்கி னார். முன்னாள் அமைச்சர் செல்வி ராம ஜெயம், முன்னாள் ஒன்றியக்குழு பெருந் தலைவர் அசோகன், ஒன்றியக் குழு உறுப்பி னர் சித்ராபாலசுப்பிரமணியன்,  பள்ளிப்படை ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம், ஆகி யோர் முன்னிலை வகித்தனர். பரங்கிப் பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவஞானம், அசோக்பாபு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் கொசப்பாடி கிராமத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் செவ்வாயன்று துவங்கியது. நிகழ்ச்சி யில் மாவட்டத் தலைவர் எம்.கே.பழனி, மாவட்டச் செயலாளர் வி.ஏழுமலை, மாநிலக்  குழு உறுப்பினர் செல்வராஜ், வட்டச் செய லாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;