tamilnadu

img

நீதிமன்ற உள்கட்டமைப்புகளுக்கு ரூ.287 கோடி 

சென்னை, ஜன 8- மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க  வேண்டும் என்பதே அரசின் கொள்கை என்று  சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டப்பேரவையில் தெரிவித்தார். கேள்வி நேரத்தில் அதிமுக உறுப்பினர் சிவசுப்பிரமணி, மொடக்குறிச்சி தொகுதி யில் புதிய நீதிமன்றம் அமைக்க அரசு முன் வருமா என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த சட்டத்துறை அமைச்  சர் சி.வி.சண்முகம், ஒரு மாவட்டத்தில் இருக்  கும் நீதிமன்றத்தில் பெறப்படும் வழக்கு எண்ணிக்கையின் அடிப்படையிலும் மாவட்ட  நீதிபதி அரசுக்கு அளிக்கும் பரிந்துரையின்  அடிப்படையில் மட்டுமே நீதிமன்றம் அமைக் கப்படும் எனவும், அவ்வாறு மாவட்ட நீதிபதி  பரிந்துரை அளிக்கும்பட்சத்தில், அரசு பரி சீலித்து நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் நீதிமன்ற உட்கட்டமைப்புகளை மேம்  படுத்த இதுவரை 287 கோடி ரூபாய் நிதி ஒதுக்  கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

;