tamilnadu

img

மீனவர்களுக்கு ரூ 5,000 நிவாரணம்

சென்னை, மே1- மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு ரூபாய் 5000 நிவாரணம் அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று மீன்  வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறி வித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் கடந்த  ஒருமாத காலத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்த ரவு பிறக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வேலை களுக்கு செல்லாமல் அன்றாட வாழ்க்கை நடத்த  கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசு  சார்பில் ஏப்ரல் மாதம் குடும்ப அட்டை தாரர்க ளுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஊரடங்கால் பாதிக்கப் பட்டுள்ள மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5000 நிதியுதவி அறிவிக்கப் பட்டுள்ளது. நலவாரிய உறுப்பினர்களாக உள்ள மீனவர்களுக்கு ரூ.1000  சிறப்பு நிவாரணம் இன்று முதல் வங்கியில் செலுத்தப் பட்டு வருகிறது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் அறிவித்துள்ளார். திரு வள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான மீனவ  மக்களுக்கு வழங்கப்படுகிறது.

;