tamilnadu

ஊரடங்கை மீறியதாக ரூ.4.74 கோடி அபராதம்

சென்னை, மே 9- தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியதாக சனிக்கிழமை  (மே 9) காலை 9 மணி வரை 4 லட்சத்து 16 ஆயிரத்து 998 வழக்கு கள் பதியப்பட்டு 4லட்சத்து 42 ஆயிரத்து 621 பேர் கைது  செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்து 65 ஆயிரத்து 390 வாகனங்கள் பறிமுதல் செய்யப்  பட்டுள்ளன. அபராதமாக சுமார் 4 கோடியே 74 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மே 8 காலை 6 மணி முதல் மே 9 காலை  6 மணி வரை 264 வழக்குகள் பதியப்பட்டு 55 இருசக்கர வாக னங்கள், 55 ஆட்டோக்கள், 8 இலகு ரக வாகனங்கள் என 118 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்ட சோத னையில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 140 இரு சக்கர வாகனங்கள், 6 ஆட்டோக்கள், ஒரு இலக ரக வாகனம் என 147 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.