tamilnadu

img

சென்னை ராயபுரத்தில் 4,584 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி

சென்னை ராயபுரத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,584 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1875 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 1,407 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உள்ளது. தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 349 ஆக உயர்ந்துள்ளது. 20,705 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். சென்னையில் மொத்தமாக 27,398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 275 பேர் உயிரிழந்துள்ளனர்; 13,698 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 4584 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 56 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டையார்பேட்டையில் 3584 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 34 பேர் உயிரிழந்துள்ளனர். கோடம்பாக்கத்தில் 2966 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 20 பேர் உயிரிழந்துள்ளனர். தேனாம்பேட்டையில் 3291 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 42 பேர் உயிரிழந்துள்ளனர். திரு.வி.க நகரில் 2550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 49 பேர் உயிரிழந்துள்ளனர். அண்ணா நகரில் 2571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 26 பேர் உயிரிழந்துள்ளனர். அடையாரில் 1534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 13 பேர் உயிரிழந்துள்ளனர். வளசரவாக்கத்தில் 1217 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 6 பேர் உயிரிழந்துள்ளனர்.