tamilnadu

img

சென்னை ராயபுரத்தில் 2,935 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி

சென்னை ராயபுரத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,935 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,162 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது. 13,170 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். சென்னையில் 15,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 128 பேர் உயிரிழந்துள்ளனர்; 8,136 பேர் குணமடைந்துள்ளனர். 

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,935 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 30 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டையார்பேட்டையில் 1,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 15 பேர் உயிரிழந்துள்ளனர். கோடம்பாக்கத்தில் 1,867 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 8 பேர் உயிரிழந்துள்ளனர். தேனாம்பேட்டையில் 1,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 17 பேர் உயிரிழந்துள்ளனர். திரு.வி.க நகரில் 1,651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 25 பேர் உயிரிழந்துள்ளனர். அண்ணா நகரில் 1,341 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 15 பேர் உயிரிழந்துள்ளனர்.