சிதம்பரம், ஜூலை 29- கடலூர் மாவட்டம் சிதம் பரம் அருகே உள்ள பரங்கிப் பேட்டை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்க ளைச் சேர்ந்த மீனவர்கள் கட லில் சுருக்கு வலையை பயன் படுத்தி சில மீனவர்கள் மீன் பிடித்து வந்தனர், இதற்கு மீன வர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இத னால் மீனவர்களிடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இந்த சம்ப வத்தால் மீனவர்கள் அடிக் கடி கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத் தத்தில் ஈடுபடும் சம்பவமும் அடிக்கடி நடைபெறும். வருவாய்த் துறையினர், காவல்துறையினர் இது தொடர்பாக மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதனம் செய்து வந்தனர். இந்நிலையில் அன்னங் கோயில் கடல்முகத்துவாரப் பகுதியில் கடலுக்கு சுருக்கு வலை கொண்டு செல்லும் படகுகளை மீனவர்கள் கண்காணித்து வந்துள்ளனர். திங்கட்கிழமை அந்த பகுதி யில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த 4 படகுகளில் இரண்டு படகிற்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதை யறிந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சம்பவ இடத் திற்கு விரைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த மீனவர்களை விரட்டியடித்தனர். இதையடுத்து செவ்வா யன்று (ஜூலை 30) சம்பந் தப்பட்ட மீனவ கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வம் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. மீனவ கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. சம்பவ இடத்தில் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் குவிக்கப் பட்டுள்ளனர்.