tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

கோயில் நிலங்களில் குடியிருப்போர் தர்ணா போராட்டம்

கோயில் மடம், வகுப்பு வாரியம்,இனாம் இடங்களில் குடியிருப்பவர்கள்,சாகுபடி செய்பவர்களின் கோரிக்கை களை வலியுறுத்தி ஓசூர் தேர் பேட்டையில் உள்ள அறநிலையத்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வியாழனன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் என்.அனுமப்பா தலைமையில், வட்டச் செயலாளர் ரவி முன்னிலையில் நடைபெற்ற  போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பி.டில்லிபாபு சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சி.பிரகாஷ்,வட்டப் பொருளாளர் ஆனந்தகுமார் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.கே.தேவராஜ், வட்டத் தலைவர் ராஜா ரெட்டி, செயலாளர் எம்.முனிராஜ், கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.எம்.ராஜு கலந்து கொண்டனர்.

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு அரசியலை செய்கிறது ஒன்றியஅரசு!  கடலூரில் மதுக்கூர் ராமலிங்கம் பேட்டி

றுப்பு அரசியலை ஒன்றிய அரசு கையில் எடுத்து வருகிறது என்று கடலூ ரில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்திருக்கிற வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்தும், அதை திரும்ப பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டுள்ளது. தற்போது  உச்சநீதிமன்றம் கூட மிக கடுமையான கேள்விகளை ஒன்றிய அரசை நோக்கி எழுப்பி இருக்கிறது. இது எந்த வகையிலும் நியாய மானது அல்ல என்பதுதான் துவக்க விசார ணையிலேயே தெரிய வந்திருக்கிறது.  நள்ளிரவு 2 மணிக்கு இந்த சட்டத்தை மோடி அரசு அவசர அவசரமாக நிறைவேற்றி இருக்கிறது. இது இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கம் கொண்டது.  எனவே தொடர்ச்சியாக குடியுரிமை திருத்த சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக உடைத்தது,  ஹீஜாப் அணிய தடை, முத்தலாக் சட்டம் என்று தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலின் ஒரு பகுதியாகவே இந்த வக்பு வாரிய திருத்த சட்டத்தை மோடி அரசு கொண்டுவந்துள்ளது.  இதை திரும்ப பெற வேண்டும் என்று இஸ்லாமிய மக்கள் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் உள்ள மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் வலியுறுத்தி வருகிறது என்றார்.

வேலூர் ஆட்சியர்  வே.ரா.சுப்புலெட்சுமி ஆய்வு

வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.ரா. சுப்புலெட்சுமி பள்ளிகொண்டா பேரூராட்சியில் 15 வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, அணைக்கட்டு வட்டாட்சியர் வேண்டா, உதவி செயற்பொறியாளர் ஷயாம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரி, ஹேமலதா உட்பட பலர் உடனிருந்தனர்.

வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி

சிதம்பரத்தில் சிபிஎம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. கருப்பையன், முன்னாள் மாநில குழு உறுப்பினர் மூசா, நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன்,  கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் செல்லையா, புவனகிரி ஒன்றிய செயலாளர் காளி.கோவிந்தராசு, குமராட்சி முன்னாள் ஒன்றிய செயலாளர் மாசிலாமணி உள்ளிட்ட கட்சியின் நகர் குழு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

வக்பு வாரிய திருத்தச்  சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் விஜய் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ். ஜி. ரமேஷ்பாபு,மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழ.வாஞ்சிநாதன் தெற்கு ஒன்றிய செயலாளர். ஜி.ஆழ்வார் மாவட்ட குழு உறுப்பினர் அம்சாயாள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என்.ஜெயசீலன், பேரூராட்சி வார்டு  ராஜேஸ்வரி ஆகியோர் பேசினர். கட்சியின் மூத்த தலைவர் கற்பனைச் செல்வம்,  ஒன்றிய குழு உறுப்பினர்கள் வேல்முருகன், கொளஞ்சியப்பன், பாண்டியன், அருள்தீபன், கோபிநாத், விமலா, தனசேகர், ஜீவா கிளைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்,  பி.கே.சுனில்,  திருஞானம்,  முரளி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்  8வது நாளாக ஓய்வூதியர்கள் காத்திருப்பு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு அனைத்துவிதமான பயன்களையும், பண பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 8வது நாளாக இரவு பகல் பாராமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டுச்சேலை உற்பத்தி: ஆட்சியர் ஆய்வு 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ் போளூர் வட்டம் கஸ்தம்பாடி ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவி குழுக்களை கொண்டு பட்டு சேலை உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர்  தர்ப்பகராஜ்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.