சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூக ரீதியாக அவர்களுக்கு தரப்பட்டு வந்த, அதே சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அனுபவித்து வரும் உரிமைகளை இவர்களுக்கு தர மறுப்பது சரியல்ல என்பது நமது நிலைப்பாடாகும்...
சென்னை,ஏப்.19- இந்திய அரசமைப்புச் சட்டத் தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகை களை கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவு படுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன் களைப் பெற அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதனன்று(ஏப்.19) கேள்வி நேரத் திற்கு அரசினர் தனித் தீர்மா னத்தை முன்மொழிந்து முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உரை யாற்றினார். அப்போது, “ஆதிதிராவிடர் களாக இருந்து மதம் மாறிய பின் னரும் தீண்டாமை உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாவது தொடரவே செய்கிறது. எனவே இதனை கனி வோடு நாம் கவனிக்க வேண்டிய வர்களாக இருக்கிறோம். நமது நாட்டின் அரசியல் சட்டப்படி இந்து, சீக்கியர், பவுத்த மத்தைத் தவிர்த்த பிற மதங்களைச் சேர்ந்த யாரும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவராகக் கருதப்பட முடி யாது”என்றார்.
உரிமைகள் மறுப்பது சரியல்ல!
வரலாற்று ரீதியாகவே அவர் கள் ஆதிதிராவிடர் வகுப்பினராக இருக்கும் போது அவர்களுக்கு பட்டியலின வகுப்புக்கான உரி மைகளை வழங்குவதே சரியான தாக இருக்கும். அதன் மூலமாகத் தான் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும். அதன் மூலமாக சமூ கத்தில் அவர்களுக்கான உயர் வும், மேம்பாடும் கிடைக்கும். மதம் மாறிவிட்டார்கள் என்பதற் காக சமூக ரீதியாக அவர்களுக்கு தரப்பட்டு வந்த, அதே சமூகத் தைச் சேர்ந்த மற்றவர்கள் அனு பவித்து வரும் உரிமைகளை இவர்களுக்கு தர மறுப்பது சரி யல்ல என்பது நமது நிலைப்பாடா கும் என்றும் அவர் கூறினார். மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால், அவர்களால் சாதி என்பது மாறுதலுக்கு உட் பட்டது அல்ல. இத்தகைய சாதி என்பது நீ வேறு, நான் வேறு என்பது மாதிரி இல்லாமல், நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்ற முறையில் இருக்கிறது.
அதாவது, படுக்கைக் கோடாக இல்லாமல் செங்குத் துக் கோடாக இருக்கிறது. மொத் தத்தில் அது சமூகக் கேடாக அமைந்துள்ளது. சாதி ஏற்றத் தாழ்வை வைத்து எந்த வகை யில் அடக்கி ஒடுக்கினார்களோ - அதே சாதியை வைத்தே இடஒதுக் கீடு வழங்கி உயர்வடைய வைக் கும் தத்துவம் தான் சமூகநீதித் தத்துவமாகும். இந்த சமூகநீதித் தத்துவத்தை அனைத்து வகை யிலும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும் என்றும் முதல்வர் தெரிவித்தார். அந்த வகையில் கிறிஸ்த வர்களாக மதம் மாறிய ஆதிதிரா விடர்களுக்கும், அரசியல் சட்ட சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடாகும்.
இடஒதுக்கீடும் வழங்க வேண்டும்
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் பட்டியலின மக்களுக்கு இணையாக கிறிஸ்தவ ஆதி திராவிடர்களுக்கும் சலுகைகள் பெறும் வகையில் அரசாணை கள் வெளியிட்டு உரிய பயன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இட ஒதுக்கீடு நீங்கலாக மற்ற உரிமை கள் தரப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசால் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து கல்வி உதவித்தொகைத் ‘திட் டங்களும் கிறிஸ்தவ ஆதிதிரா விடர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் இடஒதுக்கீட்டை யும் வழங்குவதே சரியானதாக வும் முறையானதாகவும் இருக் கும் என்று நினைக்கிறோம். அர சியலமைப்பு ( பட்டியலின சாதி கள்) திருத்த ஆணை 1950 இன் படி இந்து மதத்தில் இருந்து வேறு பட்ட மதத்தைக் கூறும் எவரும் அட்டவணை சாதிகளின் உறுப்பி னராக முடியாது.
ஆனால் 1956 ஆம் ஆண்டு சீக் கிய மதத்தை பின்பற்றுபவர் களையும் 1990 ஆம் ஆண்டு பவுத்த மத்தைப் பின்பற்றுபவர் களையும் பட்டியல் சாதியினராக சேர்க்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. இதே போன்ற திருத்தம் தான் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களும் எதிர்பார்க்கிறார்கள். இந்தக் கோரிக்கையை பல்வேறு தரப்பி னரும் அரசுக்கு வைத்துள்ளார் கள் எனவும் சுட்டிக்காட்டினார். ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும் போது, தானாக ஆதிதிராவிடர் வகுப்பில் இருந்து வெளியேறி விடுகிறார்கள் என்றும் மதம் மாறிய பின்னும் அவர்களுக்கு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த வர் என்று சாதிச் சான்றிதழ் இருந் தால் அது செல்லாது என்றும் மதம் மாறியவர்களுக்கு ஆதிதிரா விடர் வகுப்பு சான்றிதழ் வழங்கப் பட்டால் அது போலிச் சான்றிதழ் என்றும் - தேசிய ஆதி திராவிடர் ஆணையத் துணைத் தலைவர் அருண் ஹல்தார் கடந்த ஆண்டு சொல்லியிருந்தார். அப்போது பல்வேறு தரப்பினரும் இதற்கு கடுமையாக எதிர்ப்பை தெரிவித் தார்கள். இந்த நிலையில், உச்சநீதி மன்ற முன்னாள் நீதியரசர் கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையி லான ஆணையம் ஒன்றை ஒன் றிய அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் இந்தியா முழுமை யும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து மாநிலங்களின் கருத் தையும் பெற்ற பிறகே இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன். சமூகநீதியானது சமநீதி யாக வழங்கப்பட வேண்டும் என் பதை அடிப்படையாகக் கொண்ட இந்த தீர்மானத்தை அனைவரும் நிறைவேற்றித் தரக் கேட்டுக் கொண்டார். பிறகு, பாஜக வெளிநடப்பு செய்த நிலையில் அனைத்து கட்சி களும் வரவேற்று ஆதரவு கொடுத் தன. இதனால், குரல்வாக்கெ டுப்பு மூலம் ஏகமனதாக நிறை வேறியது.