சென்னை,ஏப்.30- சர்வதேச தெருவோரு குழந்தைகள் தினம் சார்பில் கோரிக்கை சாசனக்கருத்த ரங்கம் சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்றது. சாலையோரக்குழந்தைகள் மற்றும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட குழந்தை களை பாதுகாக்கும் ரெயின்போ ஹோம்ஸ் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை எழும்பூரில் கோரிக்கை விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது. ரெயின்போ அமைப்பின் தமிழ்நாடு பொறுப்பாளர் லட்சுமி பிரியா தலைமையில் சென்னை மாவட்டகுழந்தைகள் பாது காப்பு அதிகாரி அப்சா, குழந்தைகள் நல அமைப்பின் தலைவர் ராஜ்குமார், நல அமைப்பின் உறுப்பினர்கள் பாஸ்கர், சித்ரா, சமூக செயல்பாட்டாளர்கள் ரின்கு, பிரகலாதன், சுந்தர் ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மனிதவள மேலாளர் ஜூடிமாள், ஒருங்கிணைப்பாளர் ஆனந்த்,
ஆலோசகர் சரளா, கூர்நோக்காளர் செய்யது அலிபாத்திமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தீர்மானங்கள் குழந்தைகள் உடல் ரீதியான, பாலியல் மற்றும் உணர்ச்சி ரீதியான வன்கொடுமை போன்ற நடவடிக்கைகளிலிருந்து அவர்களை அரவணைக்க பாதுகாப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும், தெருக்க ளில் குழந்தைகளை கணக்கெடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும், குழந்தை உரிமைகள், அணுகுமுறையின் அடிப்படையில் உள்ளூர் நிலை, கூட்டாண்மை அடிப்படை, சிறப்புத் தலையீடுகளை அரசாங்கம் ஊக்குவித்து ஆதரிக்க வேண்டும். இந்தத் தலையீடுகள் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் மூலம் உள்ளூர் அரசு நிர்வாகத்தால் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். குழந்தைகளின் உரிமைகள் மற்றும் குறைந்தபட்ச அடிப்படைக் கடமை கள் எந்தவொரு பிற்போக்கு நடவடிக்கை களாலும் சமரசம் செய்யப்படக்கூடாது. தெருவோர குழந்தைகளின் உணவு, இருப்பிடம், கல்வி, ஆரோக்கியம், பாது காப்பு ஆகியவற்றுக்கு தேவையான நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். குழந்தை பராமரிப்பு இல்லங்க ளில் சமூகத் தணிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாநில அரசின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படஉள்ளதாக மாநில பொறுப்பா ளர் லட்சுமிபிரியா தெரிவித்தார்.