tamilnadu

img

நான்கு வருடங்களாக பூட்டிய நிலையில் உள்ள அரசினர் விடுதியை மீண்டும் திறக்க கோரிக்கை

நான்கு வருடங்களாக பூட்டிய நிலையில் உள்ள அரசினர் விடுதியை மீண்டும் திறக்க கோரிக்கை

நான்கு வருடங்களாக பராமரிப் பின்றி பூட்டியே கிடக்கும் அரசினர் விடு தியை, உரிய ஊழியர்களை நியமித்து  பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண் டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.  நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அருகே எலச்சிபாளையம் அரசு  மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வரு கிறது. இப்பள்ளி 1958 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். இப்பள்ளியில் தற்போது 223 மாணவர்களும் 222 மாண வியரும் என மொத்தம் 445 பேர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவர்களின் வசதிக்காக கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு சந்தைபேட்டை மற்றும் காவல் நிலையம் பின்புறம், தனியார் இடத்தில் அரசு விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த விடுதியில் தங்கி பயின்றவர்கள் பலர்  தற்போது அரசு பணிகளில், குறிப்பாக ஆசிரியர்களாகவும் காவல்துறை, வரு வாய் துறை உள்ளிட்ட பணிகளில் உள் ளனர்.  அரசுப்பள்ளி மாணவர்களின் நிலையைக்கருத்தில் கொண்டு, மாண வர்களின் எண்ணிக்கை மற்றும் பெற் றோர்களின் கோரிக்கையை அடுத்து,  பள்ளி வளாகத்திலேயே பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் இரண்டு  விடுதி கட்டிடங்கள் கட்டப்பட்டது. இதில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் கட்டப்பட்ட விடுதி, ரூ.31.50 லட்சம்  மதிப்பில் 2003 ஜூலை 16ஆம் தேதி,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு விடுதிகளும் ஒரே வளா கத்தில் இயங்கிவந்த நிலையில், ஆதி திராவிடர் நலத்துறை விடுதிக்கு, தனி  விடுதி காப்பாளர் இருந்தார். ஆனால்,  சில வருடங்களுக்கு முன்பு அந்த பதவி  நீக்கப்பட்டு, ஒரே நபர் மூன்று அல்லது  அதற்கும் மேற்பட்ட விடுதிகளுக்குப்  பொறுப்பாக நியமிக்கப்பட்டதை யடுத்து, மாணவர்களின் கண்காணிப்பு குறைந்தது. இதனையடுத்து, பெற்றோர்கள் மாணவர்களை விடுதியில் சேர்க்க தயக்கம் காட்டினர். மாணவர் சேர்க்கை குறைந்ததால் கடந்த நான்கு வருடங்களாக இந்த விடுதி பூட்டிய நிலையிலேயே பராமரிப்பின்றி உள்ளது. மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு, இந்த விடுதிக்கு உரிய ஊழியர்களை நியமித்து திறக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், முன்னாள் கவுன்சில ருமான சு.சுரேஷ் கூறுகையில், “முன்ன தாக தனியார் இடத்தில் இயங்கிய விடுதி யில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது, தனி  விடுதி காப்பாளர் இல்லாத காரணத் தால், விடுதி மூடப்பட்டு மாணவர்க ளுக்கு இங்கு வசதிகள் இல்லாத நிலை  ஏற்பட்டுள்ளது,” எனவே, தற்போது பூட்டியிருக்கின்ற விடுதியில் தனி விடுதி  காப்பாளர், சமையலர் மற்றும் இரவு நேர பாதுகாவலர் ஆகியோரை நிய மித்து, மாணவர்களை சேர்க்கும் நடவ டிக்கையை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.