tamilnadu

உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு நிலுவை பணப்பயன்களை வழங்க கோரிக்கை

சென்னை, ஜூலை 19- அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்து வந்த கணவர் இறந்த நிலையில், பணப்பயன் கிடைக்காமல் அவரது குடும்பத்தினர் பரி தவித்து வருகின்றனர்.  சென்னை எண்ணுார் அனல்மின் நிலை யத்தில், சிவில் பிரிவில் களப்பணி உதவி யாளராக வேலை செய்தவர் ராஜி. இவரது மனைவி மீனாம்மாள். இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.  இந்நிலையில் ராஜி  கடந்த 14.9.2017இல் இறந்து விட்டார். கணவர் இறந்த நிலையில், கிடைக்க வேண்டிய சில பணப்பயன்கள், அவரது குடும்  பத்திற்கு கிடைத்துள்ளது. அவருக்கு ஓய்வூதி யம் கிடையாது. ஆனால் அவரிடம் பிடித்தம்  செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதித் தொகை மூன்று ஆண்டுகளாகியும் இன்னும் கிடைக்கவில்லை என குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்து, எண்ணுார் தலைமை பொறியாளருக்கு மூன்று முறை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நேரில் பலமுறை முறையிட்டும் வருங்கால் வைப்பு  நிதி இன்னும் வழங்கப்படவில்லை.  எனவே எண்ணுார் அனல்மின் நிலைய நிர்வாகம் அந்த குடும்பத்தினருக்கு சேர வேண்டிய வருங்கால வைப்பு நிதியை உட னடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சி.ஐ.டி.யு. கோரிக்கை விடுத்துள்ளது.

;