tamilnadu

img

சாலையில் திறந்து கிடக்கும் கழிவு நீர் கால்வாயை மூடக் கோரிக்கை

சாலையில் திறந்து கிடக்கும்  கழிவு நீர் கால்வாயை மூடக் கோரிக்கை

கிருஷ்ணகிரி, ஜூன் 25- போச்சம்பள்ளி அருகே அரசம்பட்டியில் சாலையில் ஆபத்தான நிலையில் திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாயை உடனடியாக மூடிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், அரசம்பட்டியில் மூன்று சாலைகள் சந்திப்பில் குறுக்கே ஆபத்தான நிலையில் கழிவு நீர் கால்வாய் உடைந்து பல மாதங்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சில சிறிய விபத்துகளும் நடந்துள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போச்சம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் சாலை பராமரிப்புத் துறையினரிடமும் பலமுறை புகார் அளித்தும் கழிவு நீர் கால்வாயை முறையாக மூட நடவடிக்கை எடுக்காமல் பேருக்கு மூடியுள்ளனர். பேருந்துகள் மற்றும் பெரிய வாகனங்கள் இந்த சாலைகளில் வந்து திரும்புவது கடும் இடையூறாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக முறையாக கழிவு நீர் கால்வாயை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் போச்சம்பள்ளி வட்டச் செயலாளர் சாமு கோரிக்கை விடுத்துள்ளார்.