மேதின பூங்காவை விரைந்து சீரமைக்க கோரிக்கை
சென்னை, மார்ச் 17- சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்கா விளயாட்டு மைதானம் சீரமைக்கும் பணிகள் நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. பணி களை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி 5 மண்டல அலுவலரிடம் சங்கத்தின் சேப்பாக்கம்-திரு வல்லிக்கேணி பகுதித் தலைவர்வே.அருண்குமார், செயலாளர் பாபு, கிளை நிர்வாகி கள் வினோத், கமல் ஆகியோர் மனு அளித்தனர்.
மின் விபத்து 9 மாத குழந்தை உயிரிழப்பு
அம்பத்தூர், மார்ச் 17- மதுரவாயல் அருகே சார்ஜ் போடப்பட்டிருந்த இ-பைக் தீப்பிடித்து எரிந்த விபத்தில் பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.மதுரவாயல் பாக்கிய லட்சுமி நகர்பகுதியைச் சேர்ந்த வர் நடராஜன். இவர் வீட்டின் முதல் மாடியில் மனைவியுடன் வசித்து வருகிறார். தரைத் தளத்தில் மகன்கவுதம் (32), மருமகள்அஞ்சு (26), இவர்க ளது 9 மாத பெண் குழந்தை எழிலரசியுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் நடராஜன் தனது மின்சார மோட்டார் சைக்கிளுக்கு தரைத்தளத்தில் சார்ஜ் போட்டு விட்டு தூங்க சென்றார். திடீரென பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கவுதம், அவரது மனைவி அஞ்சு, கைக் குழந்தையுடன் வீட்டை திறந்து வெளியே வந்தனர். அப்போது 3 பேர் மீதும் தீக்காயம் ஏற்பட்டது. பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. கணவன் மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.