மெரினாவில் பொதுமக்கள் பார்வைக்காக குடியரசு தின அலங்கார ஊர்திகள் வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக அரசு உள்பட பல மாநிலங்களில் அலங்கார வாகன ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டது. இதனிடையே, டெல்லி பேரணியில் புறக்கணித்ததற்கு ஈடு செய்யும் வகையில் சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், விடுதலை போராட்டத்திற்காக பாடுபட்ட தமிழ் தலைவர்கள் இடம் பெற்று இருந்த அலங்கார வாகன ஊர்திகள் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அலங்கார ஊர்திகள் ஊர்வலமாக கொண்டு சென்று மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நிறைவு பெற்றதால் சென்னை மெரினாவில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், குடியரசு தின அலங்கார ஊர்திகள் இன்றுமுதல் 22 ஆம் தேதிவரை மெரினாவில் வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சென்று வந்த அலங்கார ஊர்தி அணிவகுப்பு நிறைவு பெற்ற நிலையில் மக்களின் பார்வைக்காக மெரினாவில் 3 இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.