tamilnadu

img

சாத்தான்குளம் விவகாரம் சட்ட அமைச்சர் அறிக்கை

சென்னை:
தந்தை, மகன் உயிரிழக்க காரணமானவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதே அரசின் நிலைப்பாடு என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளா. சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்பில் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவது அரசின் நிலைப்பாடு.தவறு இழைத்தவர்களை சட்ட ரீதியாக கடுமையாக தண்டிக்க வேண்டிய பொறுப்பு அரசின் முன் நிற்கிறது. உயிர்களை இழந்து வாடுபவர்கள் விரும்பும் நீதியை அரசு அவர்களுக்கு நிச்சயம் உரித்தாக்கும்.

;