பள்ளிகளை இணைக்கும் அரசாணை 145ஐ திரும்ப பெற வேண்டும், அரசுஊழியர்கள் ஆசிரியர்கள் மீதான 17பி ஒழுங்கு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வெள்ளியன்று (செப். 13) சேப்பாக்கத்தில் ஜாக்டோ-ஜியோ சார்பில் பேரணி நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் அ.மாயவன், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ச.டானியல்ஜெயசிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.