சென்னை, டிச. 4 - பெஞ்சால் புயல் – பெரு மழையால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
பெஞ்சால் புயல் - கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங் களை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வை யிட்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவி கள் வழங்கினார். வெள்ள நிவாரணப் பணி களை துரிதமாக மேற்கொள்ளுமாறு, மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட பொறுப்பு அமைச்சர்களையும் கண்காணிப்பு அலு வலர்களையும் அறிவுறுத்தினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு நிவா ரணப் பொருட்களை வழங்கி பணிகளை துரிதப்படுத்தினார்.
அதன்படி விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், பெரு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஸ்டாலினின் ஆணைப்படி பாதுகாப்பாக தங்குமிட வசதி, தேவையான உணவு, பால், குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் உடனடி யாக வழங்கப்பட்டன.
விழுப்புரம்
தாழ்வான பகுதிகளில் இருந்து பொது மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு 67 நிவா ரண முகாம்களில் 4906 நபர்கள் தங்க வைக்கப்பட்டு, உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. நிவாரண முகாம்களில் தங்கியிருந்த பொது மக்களுக்காக 16 ஆயிரத்து 616 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. 4000 லிட்டர் பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
வெளி மாவட்டங்களில் இருந்து 11 ஆயிரத்து 100 அரிசி பாக்கெட்டுகள் (65 ஆயிரம் கிலோ). 10 ஆயிரத்து 500 மளிகை பொருள் பாக்கெட்டுகள். 2907 ஆடைகள், போர்வைகள், 14 ஆயிரத்து 517 பாக்கெட் பிஸ்கட்டுகள் வரப்பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.
மழைநீர் சூழ்ந்த 2035 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. கனமழையின் காரண மாக 728 வீடுகள் பகுதியாகவும், 132 வீடுகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 860 வீடு கள் சேதமடைந்துள்ளது கண்டறியப் பட்டுள்ளது.
கடலூர்
தென்பெண்ணை வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலூர் மற்றும் பண்ருட்டி வட்டத்தில் தென் பெண்ணை ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் 25-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நீர்வளத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் மூலம் அங்கிருந்த வர்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் துரிதமாக வழங்கப்பட்டன.
15 இடங்களில் சமுதாய சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டன. பாதிக்கப் பட்ட மக்களுக்கு 20 ஆயிரத்து 300 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டது. வெளி மாவட்டங்களிலிருந்து வரப்பெற்ற நிவார ணப் பொருட்களில் 3 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டது. வெள்ளம் பாதித்த கிராமங்களில் உடனடியாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படாமல் தடுக்கப் பட்டுள்ளது. எனினும் கனமழையால் சேதமடைந்த வீடுகள், கால்நடை இறப்பு ஆகியவற்றிற்கான நிவாரண உதவிகள் உடனுக்குடன் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட நிர்வாகம் அரசின் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து தொடர் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.