tamilnadu

img

சி. ரங்கராஜன் குழுவின் அறிக்கையை வெளியிட்டு மக்கள் நலன் பரிந்துரைகளை அமல்படுத்திடுக... முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை:
சி. ரங்கராஜன் தலைமையிலான வல்லுநர் குழுவின் அறிக்கையினை வெளியிட வேண்டும். அக்குழு குறிப்பிட்டுள்ள மக்கள் நலன் சார்ந்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்கே.பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.

முதலமைச்சருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து தமிழகத்தில் உற்பத்தி மற்றும் தொழில்கள் தேக்கமடைந்ததையொட்டி, மாநில பொருளாதா ரத்தில் பெரும் பின்னடைவு உருவானது. இந்நிலையில் தமிழக பொருளாதார நிலையை சீரமைக்கவும், உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்க வும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர்  சி.ரங்கராஜன் அவர்கள் தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை தமிழக அரசு நியமித்தது. இக்குழு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கருத்துக்களை கேட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அக்குழுவிற்கு பல்வேறு ஆலோசனைகளையும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை கள் குறித்த விபரங்களையும் உள்ளடக்கி ஒரு விரிவான மனுவை அளித்திருந்தோம். அதில் குறிப்பாக விரிவான நகர்ப்புற வேலை உறுதித்திட்டத்தை அமலாக்க வேண்டும். பொருளாதாரத்தை சீரமைக்கும் வகையில் அரசு தனது பொது முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். சுகாதாரப் பணிகள் மற்றும் திட்டங்களுக்கான செலவுகளை அரசு உயர்த்த வேண்டும். மக்களுக்கான நிவாரண உதவிகளை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளையும் தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் சி.ரங்கராஜன் தலைமையிலான குழு தனது பரிந்துரைகளை மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அக்குழு தனது பரிந்துரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்மொழிந்த நகர்ப்புறவேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்துவது, வேலைவாய்ப்பு திட்டங்களுக்காக ரூ.10,000 கோடியை செலவிட வேண்டுமெனவும், கட்டுமான தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களுக்காக ரூ.3,200 கோடியை செலவிடவும், மருத்துவ மற்றும் சுகாதாரப் பணிகளுக்காக ரூ.5,000 கோடியை செலவிட வேண்டுமெனவும் பல்வேறு பரிந்துரைகளை அளித்திருப்பதாக பத்திரிகைகள் மூலம் அறிய முடிகிறது.பொருளாதார சீரமைப்புக்கான குழுவின் அறிக்கை பெறப்பட்டு நாட்கள் பல கடந்த பின்னரும் அந்த அறிக்கை வெளியிடப்பட வில்லை. அதன் சிபாரிசுகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை கள் குறித்து தமிழக அரசு இதுவரையில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் மேற்கொள்ள வில்லை என்பது ஆழ்ந்த கவலையை அளிக்கிறது.எனவே, சி. ரங்கராஜன் அவர்கள்தலைமையிலான வல்லுநர் குழுவின் அறிக்கையை உடனடியாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.     அக்குழு பரிந்துரைத்துள்ள மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை குறிப்பாக, நகர்ப்புற வேலை உறுதி திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்களைஉடனடியாக நிறைவேற்றுவதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.