ஆந்திர மாநில முன்னாள் முதல்வ ரும், தெலுங்குதேச தலைவரு மான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் கடந்த செப் டம்பர் மாதம் 9 அன்று கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி (ராஜ மகேந்திரவரம்) சிறை யில் அடைக்கப்பட் டார். 53 நாட்கள் நீதி மன்றக் காவலில் இருந்த சந்திரபாபு நாயு டுவுக்கு வலது கண்ணில் புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ள கடந்த மாதம் 4 வார கால ஜாமீன் வழங்கியது ஆந்திர உயர்நீதி மன்றம்.
4 வார கால ஜாமீனுக்குப் பிறகு நவம்பர் 28 அன்று அல்லது அதற்கு முன்ன தாக ராஜமகேந்திரவரம் சிறைக் கண்கா ணிப்பாளர் முன்னிலையில் சந்திரபாபு நாயுடு ஆஜராக வேண்டும் என ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலை யில், திங்களன்று சந்திரபாபு நாயுடுவுக்கு வழக்கமான ஜாமீன் வழங்கியுள்ளது ஆந்திர உயர்நீதிமன்றம்.