சென்னை, மார்ச் 16- பொதுமக்கள் தங்கள் நிலம் அல்லது வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள மின்கம் பம், மின்கம்பி, மின்பாதை, மின்மாற்றி மற்றும் மின்சாதனங்களை இடமாற்றம் செய்யக் கோரி தமிழ்நாடு மின்வாரியத்தில் விண்ணப்பிக்கும்போது, மொத்த மதிப் பீட்டுத் தொகையில் 22 விழுக்காடு நிர்வாகம் மற்றும் மேற்பார்வைக் கட்டணமாக செலுத்த வேண்டியிருந்தது.
இது பொதுமக்களுக்கு பெரிய சுமை யாக இருந்து வந்தது. எனவே, இத்தொகை யை குறைக்க வேண்டும் என நுகர்வோர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த னர். இந்நிலையில், இந்தக் கட்டணத்தை 22 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்பட் டுள்ளது. இதனால், பொதுமக்கள் செலுத்த வேண்டிய மதிப்பீட்டுத் தொகை வெகு வாகக் குறையும்.