tamilnadu

ரயில்வே பாதுகாப்பு படையில் கூடுதலாக பெண் காவலர்கள் பணி நியமனம்

சென்னை:
ரயில்வே பாதுகாப்புப் படையில் கூடுதலாக பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படையில் புதிதாக 61 துணை ஆய்வாளர் கள் பணியில் சேர்க்கப் பட்டுள்ளனர். அவற்றில், 42 பேர் ஆண்கள், 19 பேர் பெண்கள் ஆவர். அதேபோல், பணியில் சேர்க்கப் பட்டுள்ள 166 காவல்களில் 101 பேர் ஆண் காவலர்கள், 65 பேர் பெண் காவலர்கள்.ரயிலில் பயணிக்கும் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முறை அதிக அளவிலான பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர்.கொரோனா காலத்தில் கடுமையான சவால்களை மீறி காவலர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். ரயில்வே துறை உடமைகளைப் பாதுகாப்பது, பணிகளின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் அவர் கள் கவனம் செலுத்துவர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.