கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலு முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு, சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்புக்காக படக்குழுவினருடன் பிரிட்டனுக்கு சென்றிருந்த வடிவேலு அண்மையில் சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் வடிவேலு அனுமதிக்கப்பட்டார்.
அவரைத் தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்த வடிவேலு மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.