tamilnadu

img

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிளர்ச்சி பிரச்சார இயக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிளர்ச்சி பிரச்சார இயக்கம்

திருவண்ணாமலை, ஜூன் 18- ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி யும் தமிழகம் முழுவதும் ஜூன் 11 முதல் நடை பெற்று வரும் சிபிஎம் மக்கள் சந்திப்பு கிளர்ச்சி பிரச்சார த்தின் ஒரு பகுதியாக செங்கத்தில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி பங்கேற்று பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். செங்கம் நகரம், மேல் பென்னாத்தூர், இறையூர் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.லட்சுமணன், நிர்வாகி கள் கணபதி, சி.எம்.பிரகாஷ், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கலசபாக்கம் கலசபாக்கத்தில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு வட்டார செயலாளர் பி.சுந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ப.செல்வன் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் கே.கே.வெங்கடேசன், ச.குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கலசபாக்கம், காப்பலூர், ஆனைவாடி, அலங்காரமங்கலம், பாடகம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்தின் போது லாடவரம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், பாடகம் பகுதியில் பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க வேண்டும், கலசபாக்கம் அனியாலை பாடகம் அவலூர்  பேட்டை வரை அரசு பேருந்து இயக்க வேண்டும், அலங்கார மங்கலம் கிராமத்தில் சுடுகாட்டு பாதை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போளூர் போளூரில் நடைபெற்ற பிரச்சார இயக்க த்திற்கு வட்டார செயலாளர் இரா.இரவி தாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ப.செல்வன், செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், நிர்வாகி கள் சிவாஜி, கிருஷ்ணமூர்த்தி, வீரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வடகாடு, மாம்பட்டு, எழுவாம்பாடி, எடப்பிறை, பேட்டை, வசூர், போளூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது.  திருவண்ணாமலை திருவண்ணாமலை நகரத்தில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தை மாநகர செயலாளர் எம்.பிரகல நாதன் தொடங்கி வைத்தார். மாநகர நிர்வாகிகள் கே.நீதிமாணிக்கம், இ.தங்கமணி, செல்வி, கௌரி, க.வசந்த், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாந்தோப்பு பச்சையம்மன் கோயில், புதுவாணியங்குளத் தெரு, பே.கோபுரம் தெரு, செங்கம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இந்த பிரச்சாரம் நடைபெற்றது.