tamilnadu

img

கலவையில் இருசக்கர வாகனத்தில் கிளர்ச்சி பிரச்சாரம்

கலவையில் இருசக்கர வாகனத்தில் கிளர்ச்சி பிரச்சாரம்

ராணிப்பேட்டை, ஜூன் 15 – ஒன்றிய  பாஜக அரசின் மக்கள் விரோத, மதவெறி பிரச்சார செயல்பாடுகளை கண்டித்து, விலைவாசி உயர்வு, வேலை யின்மை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தியும், தமிழக அரசு மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி சிபிஎம் கலவை தாலுகா குழு சார்பில் சனிக்கிழமை (ஜூன் 14) கலவை தாலுகா செயலாளர் எஸ். கிட்டு தலை மையில் மேலப்பந்தல் பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இருசக்கர வாகன பிரச்சாரம் துவங்குவதற்கு முன்பாக பேரணிக்கு அனுமதி மறுத்து காவல் துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தடைகளைத் தகர்த்து தொடர்ந்து வாழைப்பந்தல், ஆயர்பாடி, மேல் புதுப்பாக்கம், சொரை யூர், தட்ட சேரி வழியாக இறுதியாக மாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் நிறைவு பெற்றது. இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி. ரகுபதி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆ. தவராஜ், மாவட்ட குழு உறுப்பி னர் கார்த்திக், கலவை தாலுகா குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், வாழைப் பந்தல் கிளைச் செயலாளர் தேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.