tamilnadu

ஒன்றிய அரசுக்கு எதிராக கடலூர் மாவட்டத்தில் கிளர்ச்சி பிரச்சாரம்

ஒன்றிய அரசுக்கு எதிராக  கடலூர் மாவட்டத்தில் கிளர்ச்சி பிரச்சாரம்

கடலூர், ஜூன் 18- ஒன்றிய மோடி அர சின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக வும், தமிழக அரசு மக்கள் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் மாவட்ட த்தில் பல்வேறு இடங்க ளில் கிளர்ச்சி பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன்படி, கம்மாபுரம் ஒன்றிய குழு சார்பில் சேப்ளாநத்தம், மேட்டுக் குப்பத்தில் ஒன்றியச் செயலாளர் ஆர்.கலைச்செல்வன் தலைமை யில் பிரச்சாரம் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசினார். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அமைக்க வேண்டும், 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்த வேண்டும், அனை வருக்கும் இலவச மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாலக்கரையில் தொடங்கிய பிரச்சார இயக்கம் பெரியார் நகரில் நிறைவடைந்தது. பண்ருட்டி வட்ட குழு சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் பி.ஆண்டி குப்பத்தில் தொடங்கி பனிக்கன்குப்பம், மேலிருப்பு, காட்டுப்பாளை யம், முத்தாண்டிக்குப்பம், அழகப்ப சமுத்திரம் பகுதிகளில் பிரச்சாரம் செய்து காடாம்புலியூரில் முடிவடைந்தது. வடலூர் பகுதியில் நகரச் செய லாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற நடைபயண பிரச்சாரத்தை மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தொடங்கி வைத்தார். திருத்துறையூர் மற்றும் சின்னம் பேட்டை சுடுகாட்டு சாலையை சீரமைக்க கோரியும், சின்ன பேட்டை சாலையின் இடையில் மலட்டாற்றில் உடைந்து போன பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்ட கோரி யும் பிரச்சார பயணம் நடை பெற்றது. நெல்லிக்குப்பம் பேருந்து நிலையம் முன்பு பகுதி குழுச் செயலாளர் ஸ்டீபன்ராஜ் தலை மையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.