கட்டாய ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் மறு நிர்ணயம் செய்யவேண்டும், 1.9.1996 முதல் தபால் காரர்களின் ஓய்வூதியம் மறு நிர்ணயம் செய்யப்பட்டு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்எஸ்எஸ் ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக வேலூர் தலைமை அஞ்சலகம் முன்பு மாவட்ட துணைத் தலைவர் ஜி.நரசிம்மன் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஏ.கதிர் அகமது, மாவட்ட நிர்வாகிகள் ஏழுமலை, ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.