சென்னை:
சுற்றுச்சூழல் தாக்கம் இருப்பதால்ராயல சீமா நீர்ப்பாசனத் திட்டத்திற்குசுற்றுச்சூழல் அனுமதி அவசியம் என்றுபசுமைத் தீர்ப்பாயம் உத்தர விட்டுள்ளது.ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அணைக்கட்டிலிருந்து ராயலசீமா பகுதியின் குடிநீர், விவசாயம் மற்றும்தொழில்களின் தேவைக்காக தண்ணீர் கொண்டு செல்ல ரூ. 6,800 கோடிசெலவில் உருவாக்கப்பட்ட ராயலசீமா நீர்ப்பாசனத் திட்டம் சுற்றுச்சூழல் அனுமதியின்றி தொடங்கப்பட்டதாலும், இத்திட்டத்திற்கு கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியஅனுமதியை பெறவில்லை என்பதாலும் இத்திட்டத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்று வலியுறுத்தி தெலுங்கானாவை சேர்ந்த கவினொல்லா ஸ்ரீநிவாஸ் என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார்.
மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவில், இது நீர்ப்பாசனத் திட்டம் என்பதால் சுற்றுச்சூழல் துறை அனுமதி அவசியமில்லை என்று தெரிவித்திருந்தது.இதைத்தொடர்ந்து தென்மண்டலதேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில், இத்திட்டத்தால் பெரிய அளவிலான நிலப்பரப்பில் சுற்றுச்சூழல் தாக்கம் இருப்பதால் சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006 ஆம் ஆண்டு கீழ் திட்டத்திற்கு அனுமதி பெற வேண்டியது அவசியம். ஏற்கெனவே ஸ்ரீசைலம்அணையிலிருந்து செயல்படுத்தப் படும் பிற திட்டங்களை இத்திட்டம்பாதிக்கும் என்பதால் கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை ஆணையத்திடம்உரிய அனுமதி பெறுவதும் அவசியம் . உரிய அனுமதி இல்லாமல் மேற்கொண்டு பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்ட னர்.