tamilnadu

img

ரேசன் கடைகள் நாளை திறந்திருக்கும்

சென்னை, ஆக. 29 - உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து ரேசன் கடைகளிலும் மாதத்தின் கடைசி  பணி நாளில் இன்றியமையாப் பண்டங் கள் விநியோகம் மேற்கொள்ளப்படுவ தில்லை. ஆனால் இந்த மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இன்றி யமையாப் பண்டங்கள் தடையின்றி கிடைக்கப் பெற வேண்டும் என்ற  நோக்கத்தில் சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 31) அனைத்து ரேசன் கடை களிலும் இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் செய்யப்படும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர் த. மோகன் தெரிவித்துள்ளார்.