tamilnadu

img

தோழர் டி.கே. ராமகிருஷ்ணன் காலமானார்

சென்னை, மே 22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேப்பாக்கம் திரு வல்லிக்கேணி பகுதி மூத்த தலைவர் டி.கே. ராமகிருஷ்ணன் வியாழனன்று (மே 21) காலமானார். அவருக்கு வயது 73. கேரளாவிலிருந்து  சென்னைக்கு வந்து  ஓட்டல் மற்றும் பேக்கரி தொழிலாளியாக செயல்பட தொடங்கியபோது தோழர் டி.கே.ராம கிருஷ்ணன் தன்னை மார்க்சிஸ்ட் கட்சி யில் இணைத்துக் கொண்டார். 1970 களில் அவர் தங்கி இருந்த மேன்சன் அறை பெயர்ப்பலகை இல்லாத கட்சி அலுவலகமாக இயங்கியது. கட்சி  தொடர்புகளை உயிரோட்டமாக  வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். ஒன்றுபட்ட சென்னை - செங்கல்  பட்டு மாவட்டத்தின் சேத்பட்டு தொடங்கி துரைப்பாக்கம் வரை  விரிந்த தென்சென்னை பகுதி குழுவின் உறுப்பினராக செயல்  பட்டவர் தோழர் டி.கே.ராமகிருஷ்ணன். தற்போதைய சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதிகுழுவில் கட்சி உறுப்பினர் உள்ளார். கட்சி மற்றும் தொழிற்சங்க பணிகளிலும், வெகுஜன அமைப்புகளை வளர்த்தெடுப்பதிலும் பெரும் பங்கு  வகித்தார்.  50 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்போடு கட்சி பணி யாற்றி, பெருமைமிகு ஊழியராக மறைந்துள்ளார். அவரது  உடல் சனிக்கிழமையன்று (மே 23) மாலை கிருஷ்ணாம் பேட்டை இடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறது.