tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காசேதான் கடவுளடா; கடவுளுக்கும் தெரியுமடா..!
பாமக நிறுவனர் ராமதாஸ் தத்துவம்

திண்டிவனம், ஏப். 9 - தமிழ்நாடு முழு வதும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வெள்ளியன்று விறு விறுப்பாக நடை பெற்றது. அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் தங்க ளது வாக்குகளை ஆர்வத்துடன் செலுத்தி னர். அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாசும், திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, தமிழ்நாட் டில் பல இடங்களில் பணப்பட்டுவாடா நடப்பதாக வரும் குற்றச்சாட்டுகள் வரு கிறதே என்று கேட்டதற்கு, “அது கடவு ளுக்குத் தான் தெரியும். காசேதான் கடவு ளடா. அந்தக் கடவுளுக்கும் அது தெரி யுமடா. எனக்கு வந்த தகவல்படி நியாய மாகவே தேர்தல் நடைபெறுகிறது. மாலை வரை காத்திருப்போம்” என்றார்.

மோடி நினைப்பது நடக்காது
திமுக - அதிமுக இடையே தான் போட்டி

மதுரை, ஏப். 19 - அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, மதுரை கோரிப் பாளையம், அரசு மீனாட்சி கலைக் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினரோடு வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“தமிழ்நாடு என்பது திராவிட பூமி. இங்கு திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிக்கு இடையே மட்டுமே போட்டி நிலவுகிறது. இந்தியா கூட்டணியில் யார் பிரதம வேட்பாளர் எனக் கூறவில்லை. பாஜக கூட்டணியில் மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்கிறார்கள். மோடிக்கு மேலே (ஆர்எஸ்எஸ்) ஒரு தலைமை உள்ளது. அவர்கள் மோடிதான் பிரதமர் என்று இதுவரையில் கூறவில்லை. அத னால், பாஜக கூட்டணியிலும் தேர்தலுக் குப் பின்னரே யார் பிரதமர் என தெரிய வரும். மத்தியில் யார் பிரதமராக வந்தா லும், தமிழகத்திற்கு யார் நன்மை செய் வார்கள் என பார்த்து அவர்களுக்கு தான் அதிமுக ஆதரவு தரும்.” இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.

தேர்தலுக்கு பின்னர் அதிமுக தங்க ளிடம் வந்து விடும் என ஓ. பன்னீர் செல்வம் கூறியிருப்பது தொடர்பாக பதி லளித்த செல்லூர் ராஜூ, “பலாப் பழத்தைத் தேடி ஈக்கள் வேண்டுமானால் வரும். ஒரு அதிமுக தொண்டன் கூட வர மாட்டான்” என்றும் கூறினார்.