tamilnadu

img

மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு....

சென்னை:
தமிழ்நாட்டில் காலியாக உள்ள இரு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான  தேர்தலுக்கு திமுக வேட்பாளர்களாக கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் கே.ஆர்.என்.ராஜேஸ் குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என, திமுக தலைவர் 
மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதிமுக சார்பாக, மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால், தங்களுடைய எம்.பி. பதவிகளை அவர்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, அவ்விரு இடங்களும் காலியானதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்நிலையில், அந்த 2 காலி இடங்களுக்கு அக்.4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இவ்விரு காலியிடங்களில், வைத்திலிங்கத்தின் பதவிக் காலம் 2022, ஜூன் மாதம் மற்றும் கே.பி.முனுசாமியின் பதவிக் காலம் 2026, ஏப்ரல் மாதம் முடிவடையும்.இந்நிலையில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “2021 அக்.4 அன்று, நடைபெறவிருக்கும் மாநிலங்களவை இரண்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் களாக கனிமொழி என்.வி.என்.சோமு, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப் படுகிறது” என தெரிவித்துள்ளார்.இத்தேர்தலுக்கு செப்.15 ஆம் தேதி தொடங்கி, செப்.22 வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது. செப். 23ஆம் தேதி வேட்புமனு மறுபரிசீலனையும், வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் செப். 27ஆம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்.4 அன்று காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை நடைபெறும். மாலை 5 மணிக்குத் தேர்தல் முடிவுகள் வெளியாகும்.முன்னதாக, மாநிலங்களவையில் காலியாக இருந்த ஒரு இடத்தில், திமுகவின் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி சமீபத்தில் தேர்வானது குறிப்பிடத்தக்கது.

;