வண்டலூர், ஜன.19- கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் மு.தினேஷ் குமார் தலைமையில் நடிகர் ரஜினிகாந்த் மீது புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில், கூறியிருப்பதாவது: கடந்த 14ம் தேதி சென்னையில் நடந்த ஒரு இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணியில் குறிப்பிட்ட உருவங்களை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்ற அப்பட்டமான பொய்யைப் பேசியுள்ளார். இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலைப் பரப்பி தந்தை பெரியாரின் நற்பெய ருக்குக் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக் கத்தோடு வதந்தியைப் பரப்பி பொது அமைதியைக் குலைக் கும் நடிகர் ரஜினிகாந்த் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 153ய மற்றும் 505 ஆப் சிஆர்பி பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும்’ என அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.