tamilnadu

img

ஒருவாரம் கழித்து ரஜினிகாந்த் கருத்து

சென்னை:
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் திரைக்கலைஞர்களும் காவல்துறையின் அராஜகத்தை கண்டித்த நிலையில் அரசியலில் குதிக்கப்போவதாக அறிவித்து அதற்காக காத்துக்கொண்டிருககும் ரஜினிகாந்த் வாய்திறக்காமல் இருந்தார்.

தற்போது ஒருவாரம் கழித்து அவர் திருவாய் மலர்ந்துள்ளார். சாத்தான் குளம் சம்பவம் தொடர்பாக விடுத்துள்ள டிவிட்டர் செய்தியில் “அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.“தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன் றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது. சத்தியமா விடவே கூடாது’’ என்று கூறியுள்ளார்.

;