tamilnadu

img

வருமானத்திற்கு அதிகமாக 73 சதவிகிதம் சொத்து சேர்ந்த ராஜேந்திர பாலாஜி

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 73 சதவிகிதம் சொத்து சேர்த்துள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. 

அதிமுகவின் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கடந்த 2013ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது.
ராஜேந்திர பாலாஜி தேவதானத்தில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான 35 ஏக்கர் நிலத்தை 74 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாகவும், அதுபோல திருத்தங்கல்லில் 1 கோடிக்கு அதிகமான தற்போதைய மதிப்பில் 23.33 லட்சத்துக்கு 2 வீட்டுமனைகளும்,4.23 லட்சத்திற்கு 75 சென்ட் நிலத்தையும் வாங்கியுள்ளார்  என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்த வழக்கு   கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கும் அதிகமாக 7 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து  லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73 சதவிகிதத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
மேலும், ராஜேந்திர பாலாஜி சொத்து குவித்தது குறித்து மேல் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜேந்திர பாலாஜி மீது சொத்து குவிப்பு வழக்கு பதிய கோரிய மனுவை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். 

;