tamilnadu

img

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை விசாரணைக்கு பட்டியலிட உயர்நீதிமன்றம் உத்தரவு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்

மதுரை, செப். 25 -  வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக,  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  மீது  தொடரப்பட்ட வழக்கை  விசாரணைக்கு  பட்டியலிட உயர்நீதி மன்ற பதிவாளருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.  அந்த மனுவில், அமைச்சர் பதவியை பயன்படுத்தி 2011 முதல் 2013 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.  

இந்த மனு ஏற்கெனவே விசார ணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டதில் புகாரில் முகாந்திரம் இல்லை எனத் தெரியவந்ததால் விசாரணை கைவிடப் பட்டது என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.  இதையேற்க மறுத்த நீதிபதிகள், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 1996 ஆம்  ஆண்டில் திருத்தங்கல் டவுன் பஞ்சா யத்து துணைத் தலைவராக பதவி வகித்தது  முதல் தற்போது வரை அவரு டைய வருமானம் மற்றும் சொத்துக் கள் தொடர்பாக விசாரிக்க உத்தர விட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில்  விசாரணைக்கு வந்தது.

அப்போது,  லஞ்ச  ஒழிப்பு இயக்குநர் சார்பிலும், தமிழக பொதுத் துறை செயலர் சார்பிலும் சீலிட்ட கவரில் அறிக்கைகள் தாக்கல் செய்யப் பட்டன. அந்த அறிக்கையில்,  விசாரணை யின் அடிப்படையில்,  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான  சொத்து குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது  என குறிப்பிடப்பட்டிருந்தது.  இதைத்தொடர்ந்து  சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின்  அனைத்து ஆவணங்களையும்,  நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக பொதுத்துறை செயலருக்கு உத்தரவிட்டு  வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் இந்த மனு,  நீதிபதிகள் சிவஞானம்,  தாரணி அமர்வு முன்பு புதனன்று விசாரணைக்கு  வந்தது. அப்போது , இந்த வழக்கு  தொடர்பாக  கடந்த அமர்வில் விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராணன்,  புகழேந்தி  அமர்வு நிறைய உத்தரவு களை பிறப்பித்துள்ளனர்.   எனவே, நீதிபதி சத்தியநாராயணன்,  புகழேந்தி அமர்வு  முன் விசார ணைக்கு  பட்டியலிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற பதிவாளருக்கு  நீதிபதி கள்  உத்தரவிட்டனர்.

;