சென்னை:
ராஜஸ்தான் அரசு, பட்டாசு விற்பனை தடையுத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளரான முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:-ராஜஸ்தான் மாநில அரசின் சுகாதாரத்துறை பட்டாசு வெடிப்பதை தடை செய்வதாக அறிவித்துள்ளது.காற்று மாசு ஏற்பட்டு, கொரோனா நோயாளிகளுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் நடைபெறும் பட்டாசு விற்பனையில் 95 சதவீதம் பட்டாசுகள் விருதுநகர் மாவட்டம், சிவகாசி, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உற்பத்தியாகிறது. இந்தத் தொழில் மூலம் 6 லட்சம் தொழிலாளர்கள் வரை வாழ்வாதாரம் பெற்றுள்ளனர்.உச்சநீதிமன்றம் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு படவில்லை எனத் தெரிவித்துள்ள நிலையிலும், காற்று மூலம் கொரோனாபரவும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லைஎன உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்துள்ள நிலையிலும் ராஜஸ்தான் அரசின் தடையுத்தரவு 6 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாக அமைந்துள்ளது.அண்மையில் அயோத்தியில் நடந்த ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் ஏராளமான பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டன. இதனால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை காட்டி உள்நாட்டு சுய தொழில் களை அழிக்கும்செயலின் விளைவாகவே பட்டாசு வெடிப்புக்கு தடை போடும் நிலை ஏற்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.மத்திய அரசின் வேளாண் வணிக சட்டங்களை எதிர்த்துக் குரல் கொடுக்கும்ராஜஸ்தான் மாநில அரசு குடிசைத் தொழிலாகவும், சிறு, குறு தொழில்கள் என்ற முறையிலும் லட்சக் கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளித்து வரும். ஆயிரக் கணக்கான சிறு முதலீட்டாளர்களின் சுயதொழிலையும் பாதுகாக்கும் முறையில் ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளபட்டாசு வெடிப்புக்கான தடையை ரத்து செய்யவேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ராஜஸ் தான் மாநில முதலமைச்சரை வலியுறுத்திக் கொள்கிறது.