tamilnadu

சென்னையில் மழை நீர் தேங்கும் இடங்கள்: 15 மண்டலங்களிலும் மாநகராட்சி ஆய்வு

சென்னை, ஜூன் 11- சென்னையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் பகுதிகள், சேறும், சகதியு மாக மாறும் இடங்கள் பற்றி 15 மண்டலங் களிலும் கண்டறியும் பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதா கிருஷ்ணன் இது தொடர்பாக அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பி த்துள்ளார்.

கடந்த ஆண்டின் மதிப்பீட்டின் படி சென்னையில் 320 இடங்களில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் அந்த பகுதிகளில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு திட்டப் பணிகள் என்று கூறப் படுகிறது. அடுத்த சில நாட்களுக்கு மழை முன்னறி விப்பு உள்ளது. 4 முதல் 5 செ.மீ. மழை பெய்யும் போதுதான் சவால்கள் ஏற்படும் என்று ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சேறாக மாறும் சாலை பகுதிகளில் மெட்ரோ  குடிநீர் வாரிய பணிகள் நடந்தால் மணல் அதிகமாக குவித்து வைக்கப்பட்டி ருக்கும் உடனடியாக அப்புறப்படுத்த உத்தர விட்டுள்ளார். மாதவரம், புழல், ஐஸ் ஹவுஸ் ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியாகும் சாலைகள் பற்றி ஏற்கெனவே பொதுமக்கள் புகார்கள் அனுப்பி உள்ளார்கள்.

அரசு நிறுவனங் கள், கேபிள்கள் பதிக்கும் பணிகள் காரண மாகவும் சாலைகள் பழுதாகின்றன.  எனவே நிறுவனங்களிடம் பணிகளின் தற்போதைய நிலை எப்போது முடிவடையும் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.