சென்னை, அக். 23- ரயில்வே ஊழியர்களின் பேராதரவோடு தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகிறது.
இந்திய ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீ காரத் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் 4, 5, 6 தேதி களில் நடைபெறுகிறது. தேர்தலை நடத்த வேண்டும் என்று டிஆர்இயு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை யடுத்து இந்த தேர்தல் நடைபெறுகிறது. இதை யடுத்து டிஆர்இயு தலைமையில் அமைந்து ள்ள கூட்டணி சார்பில் கடந்த மாதம் 23ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து டிஆர்இயு-வின் சின்னமான நட்சத்திர சின்னத்திற்கு வாக்கு கேட்டு அனைத்து ரயில் நிலையங்கள், ரயில்வே பணி மனைகள், முன்பதிவு மையங்கள், ரயில்வே நிர்வாக அலுவலகங்கள், ஊழியர்களின் குடி யிருப்புகளில் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் பெரம்பூரில் உள்ள லோகோ பணிமனையில் சனிக்கிழமையன்று நடைபெற்ற மாபெரும் பிரச்சார கூட்டத்தில் டிஆர்இயு செயல் தலை வர் அ.ஜானகிராமன் பேசுகையில், 1946ஆம் ஆண்டு வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி 5 தொழிலாளர் உயிர் தியாகத்துடன் முதல் சம்பள கமிஷனை பெற்றுத் தந்தது, புதிய பென்ஷன் திட்டம் என்றால் நோ பென்சன் திட்டம் என ஊழியர்களுக்குப் புரிய வைத்து அவர்களை அணி திரட்டி ரயில்வே அலுவலகங் கள் முன்பும் நாடாளுமன்றத்தின் முன்பும் போராட்டம் நடத்தியதோடு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து குடும்ப பென்ஷ னும் இறப்பு கிராஜுவிட்டியும் இன்வேலிட் பென்ஷனும் பெற்று தந்தது டிஆர்இயு” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
டிஆர்இயு சாதனைகள்
மேலும் அவர் ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பேசியதாவது:
புதிய பென்சன் திட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட அங்கீகாரம் பெற்ற பெடரேஷன் தலைவர்கள் பென்ஷன் டிரஸ்டில் இயக்குனர்களாக இருந்ததை ஊழியர்கள்