tamilnadu

img

சிவராத்திரிக்கு யானைகளும் தூங்காமல் இருக்க வேண்டுமா?

சென்னை, மார்ச் 6  கோவை ஈஷா யோகா மையத்தில்  மகா சிவராத்திரி விழா மார்ச் 8 அன்று  மாலை 6 மணிக்கு துவங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி சிலை  முன்பு கொண்டாடப்பட உள்ளது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜக தீப் தன்கர் கலந்து கொள்ள இருக்கிறார்.  

இந்நிலையில், கோவை செம்மேடு  கிராமத்தைச் சேர்ந்த சிவஞானம்  என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்  தில் வழக்கு தொடர்ந்திருந்தார். “ஈஷா  யோகா மையத்தில் ஒலி மாசு கார ணமாக யானைகளுக்கு பாதிப்பு  ஏற்படுவதாகவும், ஈஷா யோகா  மையத்திலிருந்து சுத்திகரிக்கப்படா மல், கழிவு நீரை அருகில் உள்ள விவ சாய நிலங்களில் விடுவதால் கால்  நடைகள், மக் கள் பாதிக்கப்படு கின்றன” என்றும் அவர் மனுவில்  குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர்  மற்றும் செந்தில் குமார் அமர்வில் விசா ரணைக்கு வந்த நிலையில், மனு தாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்க றிஞர் வில்சன், “சிவராத்திரி நாட்களில்  பல லட்சக்கணக்கான மக்கள் அங்கு  குவிவதால் ஒலி, ஒளி மாசு காரண மாக யானைகளுக்கு பாதிப்பு ஏற்படு கிறது; சிவராத்திரி நாட்களில் தூங்கா மல் இருப்பது அவர்கள் உரிமை, ஆனால், யானைகள் ஏன் தூங்காமல்  இருக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ததா? என நீதிபதி கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மாசுக்  கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய  தயாராக இருப்பதாக அரசு கூடுதல்  தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்தி ரன் பதில் அளித்தார். இதையடுத்து,  மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆய்வுக்கு  உத்தரவிட்டு, இந்த மனு குறித்து  ஈஷா யோகா மையமும், தமிழக அர சும் பதில் அளிக்க உத்தரவிட்டு விசா ரணையை மார்ச் 27-ஆம் தேதிக்கு  நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.