tamilnadu

img

போக்குவரத்து கழகத்திற்கு தரமான உதிரிபாகங்களை கொள்முதல் செய்க!

சென்னை, அக். 3 - தரமான உதிரி பாகங்களை கொள்முதல் செய்து வழங்க வேண்டுமென்று மாநகர போக்குவரத்துக் கழகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. மத்தியசென்னை போக்கு வரத்து அரங்க இடைக்குழு முதல் மாநாடு புதனன்று (அக்.20 சூளைமேட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில்,  புதுப்பித்தல் பிரிவில் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். பணிக்கு வந்து பேருந்து இல்லாமல் திருப்பி அனுப்பப்படும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வருகைப்பதிவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டு செங்கொடியை மூத்த உறுப்பினர் ஏ.அஜித்தாஸ் ஏற்றினார். இடைக்குழு உறுப்பினர்கள் பி.சீனிவாசன் வரவேற்க, எம்.ரவி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். ஏ.முனுசாமி, சி.கார்த்திக் ஆகியோர் தலைமையேற்றனர். மத்தியசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.திருவேட்டை மாநாட்டை தொடங்கி வைத்தார். வேலை அமைப்பு அறிக்கையை இடைக்குழுச் செயலாளர் தி.ஏழுமலையும், வரவு, செலவு அறிக்கையை இடைக்குழு உறுப்பினர் சி.முரளி கணேசும் சமர்ப்பித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் கே.ஆறுமுக நயினார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே. முருகேஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா நிறைவுரையாற்றினார். இடைக்குழு உறுப்பினர் கே.நூர்முகமது நன்றி கூறினார். இடைக்குழுதேர்வு 7 பேர் கொண்ட இடைக்குழுவின் செயலாளராக தி.ஏழுமலை தேர்ந்தெடுக்கப்பட்டார்.