வக்பு திருத்தச் சட்டத்தைக் கண்டித்து ஏப்.29இல் பொதுக்கூட்டம்
தருமபுரி, ஏப்.19- வக்பு திருத்தச் சட்டத் தைக் கண்டித்து, தருமபுரி யில் ஏப்.29 ஆம் தேதி யன்று, சமூக நல்லிணக்க மேடை சார்பில் பொதுக் கூட்டம் நடைபெறவுள் ளது. சமூக நல்லிணக்க மேடையின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், தருமபுரியில் மாவட்டப் பொறுப்பாளர் அ. குமார் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், ஒன்றிய மோடி அரசு நிறைவேற்றி யுள்ள வக்பு வாரிய திருத்தச் சட்டம் என்பது, இஸ்லாமிய மக்களின் வக்பு சொத்துக்களை அபகரிக்கும் நோக்கம் கொண்டது. இத் தகைய சட்ட திருத்தத்தை சமூக நல்லிணக்க மேடை வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், என வலியுறுத்தி ஏப்.29 ஆம் தேதியன்று தரு மபுரியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற வுள்ளது. ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி, கிளை நிர்வாகி களை அழைப்பது என முடிவு செய்யப்பட் டது. இந்நிகழ்வில், அமைப்பின் இணை ஒருங் கிணைப்பாளர் பொ.மு.நந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில நிர்வாகி ஒய்.சாதிக் பாஷா, மாவட்டத் தலைவர் என்.சுபேதார், செயலாளர் பைரோஸ், விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் சோ.அருச்சுனன், விசிக நாடாளு மன்ற தொகுதிப் பொறுப்பாளர் கோட்டை மு.கலைவாணன், மாவட்ட துணைச்செயலா ளர் ஆதி, மக்கள் கண்காணிப்பகம் பொறுப் பாளர் செந்தில் ராஜா, வாலிபர் சங்க நிர்வாகி தி.வ.தனுசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். முடிவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் சிராஜுதீன் நன்றி கூறினார்.