tamilnadu

img

மரக்காணத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்

மரக்காணத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்

விழுப்புரம், ஜூன் 20- விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் சிபிஎம் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் வெள்ளிக்கிழமை(ஜூன் 20) நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் ஆர்.உலகநாதன் தலைமை தாங்கினார். விக்கிரவாண்டி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி கலந்து கொண்டு மக்கள் சந்திப்பு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். மரக்காணம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மக்களை சந்தித்து பிரச்சார நோட்டீஸ் வழங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ராஜேந்திரன் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நிறைவு செய்து வைத்தார். இதில் மாவட்டக் குழு உறுப்பினர் வி.அர்ச்சுனன், வட்டக் குழு உறுப்பினர்கள் எம்.குமார், ஏ.ராஜி, ஐயப்பன், அமுதா, மனோகரன், எஸ்.ராஜி, கிளைச் செயலாளர்கள் செல்வி, சேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.