tamilnadu

img

செங்குறிச்சி ஊராட்சியில் நிதிமுறைகேடு பொதுமக்கள் வாக்குவாதம்

செங்குறிச்சி ஊராட்சியில் நிதிமுறைகேடு பொதுமக்கள் வாக்குவாதம்

உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி கிராமத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடந்த கிராம சபைக்கூட்டத்தில் ரூ.50 லட்சம் வரை முறைகேடு செய்யப்பட்டதாக ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள்  வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் கடந்த 5 மாதங்க ளாக ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் நடை பெற்ற திட்ட பணிகளின் வரவு செலவு  கணக்குக் குறித்து விவாதிக்கப்பட்டது. 5 மாதத்தில் 50 லட்சத்தி 47 ஆயிரம் ரூபாய்க்கான வேலைகள் நடைபெற்றதாக ஊராட்சி செயலாளர் ஆனந்தன்  கணக்கு காட்டினார். இதில் எந்த பணிகளும் நடைபெறவில்லை முற்றிலும் ஊழல் நடந்துள்ளது என்றும் கிராம மக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கேள்வி கேட்டனர். இதில் பதில் அளிக்க முடியாத ஊராட்சி செயலாளர் மற்றும் அதிகாரிகள் மவுனம் காத்ததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள்,  சம்பந்தப்பட்டஊராட்சி ஒன்றிய நிர்வாக அதிகாரிகள் வரும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.