கடலூர், ஜூன் 26- மாணவர்களுக்கான உளவியல் ஆலோ சனை மையங்களை மாவட்ட அளவில் அமைக்க வேண்டுமென தமிழ்நாடு அறி வியல் இயக்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கட லூர் மாநாட்டிற்கு தலைவர் எம்.உதயேந்தி ரன் தலைமை வகிக்க, செயலாளர் ஏ.பீட்டர் ஆரோக்கிய அமல்ராஜ் அறிக்கை சமர்பித்தும், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.விக்டர் ஜெயசீலன் தீர்மானங்களை விளக்கி பேசினார். ஹைட்ரோகார்பன் மண்ட லம் குறித்து கருத்தாளர் மு.மருதவாணன், புதிய கல்விக் கொள்கை குறித்து மாவட்ட துணைத் தலைவர் ஜி.தெரசாகேத்தரின் ஆகி யோர் கருத்துரையாற்றினார். கூட்டத்தில், அனைத்து தனியார், அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் வசூலிக்கப் படும் கட்டணங்களையும் பள்ளியின் தகவல் பலகை மற்றும் அவர்களின் விளம்பர பதாகை களில் அமைக்க வேண்டும். கடலூரில் வாடகை கட்டடத்தில் இயங்கும் அரசு அருங்காட்சியகத்தை மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும். மாவட்டத்தில் நவீன கோளரங்கம் அமைக்க வேண்டும். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், குழந்தைகள் நல உதவி காவல் ஆய்வாளர், உளவியல் மருத்துவர்கள், குழந்தைகள் நலக்குழு பிரதிநிதிகள் அடங்கிய குழு உரு வாக்க வேண்டும். கடலூர் வெள்ளி கடற் கரையை விஞ்ஞானரீதியான அணுகு முறையோடு பாதுகாக்க வேண்டும். கெடிலம், பெண்ணையாறு ஆகிய ஆறுகளில் கட்டப் பட்டுள்ள தடுப்பணைகளில் தொழிற்சாலை, நகராட்சிக் கழிவுகள் கலப்பதை கண்கா ணிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்டப் பொருளாளர் டி. ஜெயவீரபாண்டியன் வரவேற்க, துணைச் செயலர் எப்.ஆரோக்கியராஜ்விமல் நன்றி கூறினார்.