சென்னை, ஜூன் 01- உணவு ,வேலை வழங்க வேண்டும். வன்முறைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி ஜூன் 1 திங்களன்று மாநிலம் முழுவதும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்லில் 48 மைங்களிலும் சிவகங்கையில் 21 மையங்களிலும் மதுரை மாநகரில் 45 மையங்கள், மதுரை புறநகரில் 28 மையங்கள், இராமநாதபுரத்தில் 10 மையங்கள், தூத்துக்குடியில் 40 மையங்கள், கன்னியாகுமரியில் 12 மையங்கள், விருதுநகரில் 33 இடங்களில் நடை பெற்றது. கடலூர் மாவட்டத்தில் 28 இடங்கள், கிருஷ்ணகிரி 6 இடங்கள், மத்திய சென்னை யில் 29 இடங்கள், தர்மபுரியில் 37 இடங்கள், தஞ்சையில் 40 இடங்கள், திருச்சி புறநகரில் 4 இடங்கள்,கோவையில் 50 இடங்கள், திருப்பூரில் 40 மையங்கள், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 26 மையங்கள், திருவாரூர் மாவட்டத்தில் 37 மையங்கள் என 517 மையங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.