tamilnadu

சசிகலாவின் புதிய வீட்டில் சொத்து முடக்க நோட்டீஸ் ஒட்டப்பட்டது

சென்னை:
சென்னை போயஸ் கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில் சொத்துக்களை முடக்கியதற்கான நோட்டீஸை வருமான வரித்துறையினர் ஒட்டியுள்ளனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்துசேர்த்த வழக்கில்  சசிகலா, இளவரசி மற்றும்சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் சிறை தண் டனை உறுதி செய்யப்பட்டது.  அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

2017 ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 180 இடங்களில் வருமான வரி துறை சோதனைநடத்தியது.இதில் ரூ.1600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன்இல்லம் எதிரே இருந்த 10 கிரவுண்ட் இடம்சசிகலாவுக்கு சொந்தம் என கூறப்பட்டது.  இதன் மதிப்பு ரூ.300 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. 

இந்தநிலையில் அண்மையில்  சென்னை போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. பினாமி தடுப்புபிரிவு சட்டத்தின் கீழ் சசிகலா வாங்கிய சொத்துக்களை முடக்கி வருமான வரித் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.இந்நிலையில்  சென்னை போயஸ் கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில்,சொத்துக்களை முடக்கியதற்கான நோட் டீஸை வருமான வரித்துறையினர் ஒட்டியுள்ளனர். முடக்கப்பட்ட சசிகலாவின் ரூ.300 கோடி சொத்துக்கான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸை ஒட்டினர்.