போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்குவதற்கு ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கோவை போக்குவரத்து கழகத்திற்கு ரூ.4.3 கோடி, கும்பகோணம் போக்குவரத்து கழகத்திற்கு 8 கோடி, மாநகர போக்குவரத்து கழகத்திற்கு ரூ.9.6 கோடி ஒதுக்கீடு. இதன்மூலம் 2022 டிசெம்பர் முதல் நடப்பாண்டு மார்ச் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.